ஈ – நாகர்கோவில் > இன்று
தக்கலை போலீஸ் துணை கோட்டத்தில் 15 இடங்களில் போலீஸ் பூத்துகள் அமைக்கப்படும் என்று, தக்கலை போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாபு கூறினார். “சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்விக்காக தமிழக அரசு ரூ.2 கோடி செலவு செய்து உள்ளது” என்று, கலெக்டர் சுனில்பாலிவால் கூறினார். முந்திரி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி குழித்துறையில் பி.எம்.எஸ். சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, தக்கலை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
நாகர்கோவிலில் பிரமாண்டமான கிரேட் இந்தியன் சர்க்கஸ் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இதில் 60 அடி உயர வளையத்துக்குள் ரஷிய பெண் நடனமாடி சாகசம் நிகழ்த்துகிறார்.
நாகர்கோவில் அருகே மேல உடையப்பன் குடியிருப்பில் உள்ள வைகுண்டசாமி திருநிழல் தாங்கலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருஏடு வாசிப்பு தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருஏடு வாசிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
மீன்களுக்கான சந்தை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று, மீன் தொழில் சார்ந்த பெண் தொழிலாளர்களின் குமரி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ.1 கோடி செலவில் நடைபெறும் கீழமணக்குடி சாலையை அகலப்படுத்தும் பணியை கலெக்டர் சுனில்பாலிவால் பார்வையிட்டார். சாலைப்பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சி, நாகர்கோவிலில் இன்று தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக நாகர்கோவில் தொலைதொடர்பு மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை தந்தி அலுவலகங்களிலும், அங்கீகாரம் பெற்ற பொது தொலைபேசி நிலையங்களிலும் தந்திகள் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்கனவே நடைமுறையில் இருந்துவருகிறது. இதுதவிர சந்தாதாரர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே டெலிபோன் மூலமாக தந்திகளை (போனோகிராம்) பதிவு செய்யலாம். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை எந்த ஒரு இடத்தில் இருந்து கொண்டும் 1585 என்ற எண்னை ‘டயல்’ செய்தால், நாகர்கோவில் தந்தி அல்வலகத்துடன் நேரடி இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, உடனே டெலிபோன் மூலமாக தந்திகள் பெறப்படும். இதனால் சந்தாதார்களுக்கு காலதாமதமோ, அலைச்சலோ ஏற்படுவதில்லை. இதற்காக ரூ.2 மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த வசதியை சந்தாதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பொதுமேலாளர் விஜயகுமரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
இரட்டைக்கரை சானலில் தண்ணீர் திறக்ககோரி போராட்டம் நடத்தப்போவதாக, விவசாய சங்க முன்னாள் துணைத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சபரிமலையில் பகவான் ஐயப்பனின் பூஜைக்கு தேவையான பூக்களை சன்னிதானத்தில் பூந்தோட்டம் அமைத்து பெற தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் இந்து முன்னணி திருவிழாக் குழு சார்பில் வரும் 23ம் தேதி முதல் ஸ்ரீபத்பாகவத சப்தாஹயக்ஞம் நடக்கிறது.
கிறிஸ்துவ மக்களின் மிக முக்கிய மகிழ்ச்சிகர விழாவான கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கத் தொடங்கியுள்ளன. வீடுகள் தோறும் ஏசுபாலனை வரவேற்கும் வால் நட்சத்திரங்கள் (மிசோரி) இரவில் மின்னிக் கொண்டிருக்கின்றன.
நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் இன்று மாலையில் துவங்கும் புதிய பயணச்சீட்டு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஆர்.வேலு நாகர்கோவில் வருகிறார்.

Leave a comment